மூன்று தினங்களாக நீர் இல்லை – மக்கள் அவதி..!!
Read Time:1 Minute, 11 Second
அகுங்கல்ல – நெல்லிகொட, கேகாலை, பியகம, கொஸ்கொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று தினங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையிடம், அத தெரண வினவியது.
அப் பகுதியிலுள்ள நீர் வழங்கும் பாதைகள் சில புனரமைப்புச் செய்யப்படுவதே இதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் இன்று இரவு அளவில் நிலைமையை வழமைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேசிய நீர் வழங்கள் வடிகானமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Average Rating