உத்தர பிரதேசத்தில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்…!!
உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 16 வயது மாணவன் சிவசுப்பிரமணியனுடன் 25 வயது ஆசிரியை கோதைலட்சுமி ஓடிசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்ற சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்திலும் நடந்து உள்ளது.
அங்குள்ள சகரான்பூர் என்ற இடத்தை சேர்ந்த மாணவர் அனுப் (வயது17). 11–ம் வகுப்பு படித்து வந்தார். அவர் 25 வயது ஆசிரியை ஒருவரிடம் தினமும் டியூசனுக்கு சென்று வந்தார். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு 11–ம் வகுப்பு பரீட்சை முடிந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்யும் நோக்கத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அம்பாலாவில் உள்ள அனூப் அத்தை வீட்டுக்கு சென்றனர். இதுபற்றி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் பெற்றோர்களும், உறவினர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
Average Rating