வேலைக்காரியால் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார் வயோதிபர்! யாழில் சம்பவம்..!!

Read Time:2 Minute, 13 Second

download (3)நிலையில் யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட முதி­யவர் சிகிச்சை பய­னின்றி நேற்று உயி­ரி­ழந்­துள்ளார். இவர் தீ காயங்­க­ளுக்கு இலக்­கான நிலையில் குறித்த சம்பவத்தில் தீ காய­ம­டைந்த மேலு­மொரு பெண் பொலிஸ் காவ­லுடன் சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறார்.

கடந்த புதன்­கி­ழமை இரவு தீ காயங்­க­ளுக்கு இலக்­கான நிலையில் இருவர் யாழ்ப்­பாணம் போதனா வைத்­தி­யா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டனர். இதில் அரு­ளா­னந்தம் சிவா­னந்தம் (வயது 64) என்­பவர் நேற்று முன்­தினம் இரவு மர­ண­மா­கி­யுள்ளார்.

உயி­ரி­ழக்க முன்னர் அவர் வழங்­கிய வாக்­கு­ மூ­லத்தில், வேலைக்­காரப் பெண்ணே தன் மீது பெற்­றோலை ஊற்றி தீ மூட்­டினார் எனத் தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. மேலும், தீயில் எரிந்த அரு­ளா­னந்தம் சிவா­னந்தம் எழுப்­பிய உதவிக் குரலை கேட்டு ஓடி வந்த அயலில் இருந்­த­வர்கள் குறித்த பெண்ணை அவ் வீட்டில் கண்­டுள்­ளளர் என்றும் கூறப்­ப­டு­வ­துடன், அவ் வேலைக்­காரப் பெண் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தீயில் அவரும் காய­ம­டைந்­த­மை­யினால் அவர் பொலிஸ் காவலில் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

இந்­நி­லையில், வைத்­தி­ய­சா­லைக்கு நேரில் சென்று விசா­ரணை நடாத்­திய யாழ். நீதவான் நீதி­மன்ற நீதிவான் சி. சதீஸ்தரன் சந்தேகநபரான வேலைக்காரப் பெண்ணை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர விட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி..!!
Next post மனித முகத்துடன் அதிசய மாங்காய்..!!