வேலைக்காரியால் பெற்றோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார் வயோதிபர்! யாழில் சம்பவம்..!!
நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவர் தீ காயங்களுக்கு இலக்கான நிலையில் குறித்த சம்பவத்தில் தீ காயமடைந்த மேலுமொரு பெண் பொலிஸ் காவலுடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கடந்த புதன்கிழமை இரவு தீ காயங்களுக்கு இலக்கான நிலையில் இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அருளானந்தம் சிவானந்தம் (வயது 64) என்பவர் நேற்று முன்தினம் இரவு மரணமாகியுள்ளார்.
உயிரிழக்க முன்னர் அவர் வழங்கிய வாக்கு மூலத்தில், வேலைக்காரப் பெண்ணே தன் மீது பெற்றோலை ஊற்றி தீ மூட்டினார் எனத் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. மேலும், தீயில் எரிந்த அருளானந்தம் சிவானந்தம் எழுப்பிய உதவிக் குரலை கேட்டு ஓடி வந்த அயலில் இருந்தவர்கள் குறித்த பெண்ணை அவ் வீட்டில் கண்டுள்ளளர் என்றும் கூறப்படுவதுடன், அவ் வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தீயில் அவரும் காயமடைந்தமையினால் அவர் பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு நேரில் சென்று விசாரணை நடாத்திய யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் சி. சதீஸ்தரன் சந்தேகநபரான வேலைக்காரப் பெண்ணை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர விட்டுள்ளார்.
Average Rating