கடற்படையினரின் தளத்தை தாக்கிய கனமழை..!!
Read Time:1 Minute, 6 Second
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் இன்று காலை 8.00 மணிவரை பெய்த கனமழை தற்பொழுது ஓய்ந்துள்ளது.
கனமழையின் தீவிரத்தால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினர் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்திய நிரந்தர வேலி அமைப்பு நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
நள்ளிரவு பெய்த கனமழை வெள்ளம் கடற்படையினரின் 100 மீற்றர் நீளமான நிரந்தர வேலியை வீழ்த்திச் சென்றுள்ளது.
எனினும் தற்போது கடற்படையினர் மீண்டும் தமது வேலி அமைப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating