அந்தியூரில் 104 வயது முதியவர் மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார்…!!
Read Time:58 Second
அந்தியூரில் 104 வயது முதியவர் ரத்தினசபாபதி தனது மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார்.
அந்தியூர் தொகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு விட்டு செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்திலேயே மூத்த குடிமகனாக அந்தியூர் பெரியார் வீதியில் வசித்து வருபவர் ரத்தினசபாபதி. இவருக்கு 104 வயதாகிறது.
இவர் தன் மனைவி பச்சியம்மாளுடன் (94) அந்தியூர் கிழக்கு பள்ளிக்கு வந்து ஓட்டு போட்டார். இந்த தள்ளாத வயதிலும் வந்து ஓட்டு போட்ட அந்த முதியவரை மற்ற வாக்காளர்கள் வியப்புடன் பார்த்தனர்.
இதே போல் வனப்பகுதியான பர்கூர் மலைப்பகுதியிலும் மலைவாழ் மக்கள் ஓட்டு போட்டனர்.
Average Rating