19 ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிர்வாழும் கடைசி நபர்…!!
1800 களில் பிறந்த உலகின் கடைசி நபரான பெண்ணொருவர் இத்தாலியில் வசிக்கிறார்.
எம்மா மொரானோ எனும் இப்பெண் 116 வயதானவர். உலகின் மிக வயதானவராகவும் இவர் விளங்குகிறார்.
அதேவேளை, 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிர்வாழும் உலகின் ஒரேயொரு மனிதரும் இவரே.
இவருக்கு முன் உலகின் மிக வயதானவராக விளங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த சுசான்னா முஷாத் ஜோன்ஸ் கடந்த வியாழக்கிழமை இறந்தார்.
சுசானாவைவிட நான்கரை மாதங்கள் இளமையானவர் எம்மா மொரானோ. இவர் 1899 நவம்பர் 29 ஆம் திகதி பிறந்தவர். இத்தாலியின் வட பிராந்திய நகரான வேர்பானியாவில் இவர் வசிக்கிறார்.
சிறு பருவத்தில் தான் நோயொன்றினால் பாதிக்கப்பட்டதையடுத்து தினமும் பச்சை முட்டை உட்கொண்டு வருவதாக அவர் கடந்த வருடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் மத்தியத்தரைக்கடல் தீவான சார்டீனியாவில் 100 வயதைக் கடந்த பலர் வசிக்கின்றனர். 105 வயதானவர்கள் பலர் உள்ளனர்.
அவர்களின் நீண்ட கால ஆயுள் இரகசியம் குறித்து இத்தாலியின் மிலான் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating