மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி..!!
Read Time:45 Second
வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் எட்டு மாத கைக்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பெய்த அடை மழை காரணமாக வீட்டிற்குள் மழை நீர் சென்றதில் உறங்கிக் கொண்டிருந்த பிறந்து எட்டு மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating