மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது..!!

Read Time:1 Minute, 19 Second

timthumb (1)இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டமையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ – ஆல்டி தோட்டவனப் பகுதியில் சட்ட விரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவைப் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பொகவந்தலாவை பிரதேசத்தில் பெற்றேசா தோட்டப் பகுதியில் ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இன்று ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளார்.

நாடெங்கிலும் சட்டவிரோத செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி..!!
Next post இந்த பீட்ஸாவின் பெட்டியையும் சுவைத்து உண்ணலாம்…?? பார்த்தால் அசந்திடுவீங்க…??