கிண்ணியாவில் மூதாட்டியைக் கொன்று தங்க நகைகள் கொள்ளை…!!

Read Time:2 Minute, 2 Second

692386445Untitled-1திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் பெண் ஒருவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவர் அணிந்திருந்த தங்க வளையல்களும், சங்கிலியும் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான முகம்மது இஸ்மாயில் ஹாஜரா (வயது 65) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

றஹ்மானியா வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த இவர், வீட்டின் முன்பக்கத்தில் சிறிய பல சரக்குக் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார்.

வழமை போன்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு ஒன்பது மணிக்கு தனது கடையை பூட்டிவிட்டு உறங்குவதற்குச் சென்ற இவர், இன்று திங்கட்கிழமை (16) காலை ஒன்பது மணியாகியும் கடையைத் திறக்கவில்லை.

இந்தநிலையில், பக்கத்து வீட்டிலிருந்த இவரது பேத்திகள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கொள்ளையிடும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள கிண்ணியா பொலிஸார், இதனுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாவ்!.. பார்த்ததும் ருசிக்க தோன்றும் சூப்பரான Fast Food…!!
Next post சீமான்; தமிழகத்தின் முதல் அமைச்சராம்? -அவதானி…!!