உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் உயிருக்கு போராடிய பெண்- சாகச நடனத்தில் நேர்ந்த விபரீதம்…!!
அவுஸ்திரேலியாவின் மெல்போரின் சாலையில் மெழுகுவர்த்திகளை வைத்து நடனமாடிக் கொண்டிருந்த பெண் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர சாலையில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று மதிய வேளையில் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது நடனத்தின் ஒரு பகுதியாக உடலில் மெழுகுவர்த்திகளை வைத்து ஆடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவளது ஆடையில் தீ பற்றி கொண்டது.
இதனை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், தீயை அணைத்ததுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கால்கள் மற்றும் முதுகுப் பகுதி எரிந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த நபர்கள் கூறுகையில், உடலில் தீ பற்றி எரிவதை சாகசத்தின் ஒரு பகுதி என்றே முதலில் நினைத்ததாகவும், பின்னர் அந்த பெண் அலறித் துடித்த போதே விபரீதத்தை உணர்ந்து காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெல்போர்ன் நகர கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதலில் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இதுபோன்ற சாகசங்களை முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Average Rating