சிரியாவில் துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை: ஐ.எஸ்.தீவிரவாதிகள் 27 பலி…!!
சிரியாவில் அலெப்போ நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 27 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற அல்-நுஸ்ரா தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது.
ஆனாலும் சிரியாவின் முக்கிய நகரான அலெப்போ நகரில் சண்டை நிறுத்தத்தை மீறி அரசுப்படையும் கிளர்ச்சியாளர்கள் படையும் மோதி வருகின்றன. மற்றொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. அமெரிக்க கூட்டுப்படை அவர்களது இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து வான்தாக்குதலை நடத்திவருகிறது.
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக துருக்கி ராணுவமும் சிரியாவில் வான்தாக்குதலை நடத்த தொடங்கி உள்ளது. நேற்று அலெப்போ நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 27 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
Average Rating