இதுவரை 08 பேர் உயிரிழப்பு; 08 பேரை காணவில்லை…!!

Read Time:1 Minute, 32 Second

downloadநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவது 08 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 08 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைக் கூறியுள்ளது.

அதேவேளை 2 இலட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளதாகவும், 134,466 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.

இதேவேளை மழை வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 84 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

இவ்வாறு முகாம்களில் உள்ள மக்களுக்கு அவசியமான சுகாதார தேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட மட்டங்களில் அனர்த்த ஒருங்கிணைப்பு மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படியொரு நடனத்தை வாழ்நாளில் பார்த்திருக்கவே மாட்டீர்கள்…!!
Next post பல பாடசாலைகள் பூட்டு…!!