பல பாடசாலைகள் பூட்டு…!!
Read Time:1 Minute, 16 Second
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால் மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வடமேல் மாகாணத்தின் 25 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாகாண கல்வியமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தின் பாடசாலைகளை நடத்துவது குறித்த தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்க கூறினார்.
Average Rating