ராஜஸ்தானில் மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை..!!
Read Time:1 Minute, 12 Second
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் தலைமை காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் நகரில் உள்ள மத்திய ஆயுதப்படை முகாமில் நேற்றிரவு 9 மணியளவில் தலைமை காவலரான தரம்வீர் சிங் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அரியானா மாநிலத்தை சேர்ந்த அவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக சகவீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த அஜ்மீர் நகர போலீசார் தரம்வீர் சிங்கின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating