இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் 07 பேர் கைது…!!
Read Time:1 Minute, 12 Second
சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் 07 பேர் ஊருபொக்க, ஹீகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டிகளை சோதனை செய்த போது அதில் இருந்து கடவுள் படங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளின் போது, நோயாளர் ஒருவரை குணப்படுத்தும் நடவடிக்கைக்கு செல்வதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் அது பொய் என்பது தெளிவாகியுள்ளது.
சந்தேகநபர்கள் புதையல் அகழ்விற்காக சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இம்மாதம் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Average Rating