காரைக்குடி அருகே தொழிலாளி தற்கொலை…!!
Read Time:1 Minute, 13 Second
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஞானவேல் (வயது55). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஞானவேல் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அதிகளவில் செலவு செய்து சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் ஞானவேலுக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறநது. அவ்வப்போதும் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதில் பஞ்சவர்ணம் கோபித்து கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஞானவேல் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Average Rating