மனைவிக்கு மருத்துவ செலவு செய்ய முடியாமல் திண்டாடிய கணவர்: எடுத்த விபரீத முடிவு…!!

Read Time:2 Minute, 42 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)அமெரிக்க நாட்டில் மனைவியின் மருத்துவ செலவினை கவனிக்க முடியாத கணவர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள St. Lucie County என்ற பகுதியில் வில்லியம் ஹேக்கர்(86) மற்றும் கரோலின் ஹேக்கர்(78) என்ற வயதான தம்பதி வசித்து வந்துள்ளனர்.

கரோலின் ஹேக்கர் மூட்டு அலற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த 15 ஆண்டுகளாக அவதியுற்று வந்துள்ளார். மேலும், மனைவியின் மருத்துவ செலவினை கவனிக்க முடியாமல் வில்லியம் மிகவும் திண்டாடி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று பொலிசாரை தொடர்புக் கொண்ட வில்லியம், ‘தனக்கும் தனது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக வந்து உதவுமாறு’ கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல் பெற்ற பொலிசார் உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்ற போது வில்லியம் வாசலுக்கு வந்து பொலிசாரை அழைத்து சென்றுள்ளார்.

ஓர் அறைக்கு பொலிசாரை அழைத்து சென்றார் வில்லியம். அங்கு படுக்கையில் போர்வை போர்த்தப்பட்டு அவரது மனைவி உயிரிழந்து இருந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரோலின் தலையில் ஆழமான துப்பாக்கி குண்டுக் காயம் இருந்துள்ளது.

இது தொடர்பாக பொலிசாரிடம் வில்லியம் வாக்குமூலம் அளித்தபோது, ‘எனது மனைவிக்கு நீண்ட வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதியுற்று வந்துள்ளார். இதனை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

மேலும், மனைவியின் மருத்துவ செலவுகளை கவனிக்க முடியாததால் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக வில்லியம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது வில்லியம் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாலையில் குற்றுயிராக கிடந்த நபர்: ஹீரோவாக மாறி காப்பாற்றிய செவிலியர்..!!
Next post தொடருமா புலி வேட்டை? உண்மையில் இந்தக் கைதுகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்? –கருணாகரன்..!!