காஷ்மீருக்கு பூகம்ப ஆபத்து: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!
Read Time:1 Minute, 19 Second
அமெரிக்காவில் உள்ள ஓரிகன் மாகாண பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இமயமலை சாரலில் உள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பூகம்பம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக இமயமலை பகுதியில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில் நேபாளத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாலகோட் – பாக் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.
அதே போன்று காஷ்மீரில் கடும் பூகம்பத்தால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரியாசி பால்ட் வகை பூகம்பம் ஏற்படும். 8 ரிக்டர் அளவில் ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
Average Rating