பொழுதுபோக்கிற்காக வெள்ளநீரில் சவாரி செய்த படகு கவிழ்ந்ததில் இருவர் பலி…!!
Read Time:56 Second
அவிசாவளை – ஹங்வெல்ல பிரதேசத்தில் வெள்ள நீரில் பொழுதுபோக்கு நோக்குடன் படகு ஓடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹங்வெல்ல எம்புல்கம என்ற பகுதியில் சிறுவர்கள் இருவருடன் வயோதிபர் ஒருவர் தேங்கிநிற்கும் வெள்ளநீரில் படகுச்சவாரி செய்துள்ளார்.
இதன்போது படகு கவிழ்ந்ததை அடுத்து அதில் பயணித்த வயோதிபரும் சிறுவர் ஒருவரும் உயிரிழந்ததோடு, மற்றைய சிறுவரை பிரதேச வாசிகள் காப்பற்றியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Average Rating