ஜின் கங்கையில் விழுந்த பெண்ணை காணவில்லை…!!
Read Time:47 Second
பத்தேகம புதிய பாலத்திற்கு அருகில் ஜின் கங்கையில் மூழ்கி பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.
குறித்த பெண் புதிய பாலத்தினூடாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத ஒருவரினால் ஆற்றில் தள்ளி விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating