விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஆட்டோ…!!

Read Time:1 Minute, 50 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90செங்கலடி HNB வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச்சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9மணியளவில் இடம்பெற்றுள்ளது.

HNB வங்கிக்கு முன்னால் மிகவேகமாக வந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் சாரதி படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ளது.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியை கண்டு பிடிப்பது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து உடைந்து கிடந்த முன்கண்ணாடியை வைத்து தப்பி சென்ற முச்சக்கர வண்டி,ABI-4641 இலக்கத்தையுடையது எனவும், கமலநாதன் சிந்துஜன் நல்லதம்பி வீதி ஏறாவூர் 05 என்ற பெயரில் பதிவாகியுள்ள என்பதும் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜின் கங்கையில் விழுந்த பெண்ணை காணவில்லை…!!
Next post பவுஸர் விபத்து – இருவர் காயம்…!!