5.5 ரிக்டர் பதிவானது: தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் 1000 வீடுகள் தரைமட்டம்
Read Time:1 Minute, 10 Second
முன்னாள் சோவியத் ïனியனில் ஒரு பகுதியாக இருந்து 1991-ம் ஆண்டு தனியாக பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். இங்குள்ள கும்சாங்ஜின் பகுதியில் நேற்று மாலை திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி விட்டது.
3 கிராமங்கள் அடியோடு அழிந்து மண்ணோடு மண்ணாகி விட்டன. இதில் 3 குழந்தைகள் பலியாகி விட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டன. இந்த பகுதியில் உயரமான கட்டிடங்கள் அதிகம் இல்லாததால் உயிர் சேதம் அதிக அளவு ஏற்படவில்லை.