வாகன விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்..!!
Read Time:1 Minute, 21 Second
வெலிபென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்த நால்வர் காயமடைந்ததோடு அவர்களில் 17 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரும் கொழும்பு மற்றும் நுகேகொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹம்பேகமுவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Average Rating