வயோதிப பெண் கழுத்து வெட்டி கொலை…!!
Read Time:1 Minute, 29 Second
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் ஆறு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் கணவருடன் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.
உடுப்பிட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 70) என்பவரே அவ்வாறு கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் இரவு உணவினை உட்கொண்ட பின்னர் கை கழுவுவதற்காக வீட்டின் பின் புறமுள்ள குளியல்அறைக்கு சென்ற போது , குளியல் அறைக்குள் மறைந்திருந்த இனம் தெரியாத நபரொருவர் வயோதிப பெண்ணின் கழுத்தை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளார்.
கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அபயக்குரல் எழுப்பியவாறு வீட்டுக்குள் ஓடிவந்த வயோதிப பெண் வீட்டினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
Average Rating