தலவாக்கலை முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்..!!
Read Time:52 Second
நானுஓயாவிலிருந்து- தலவாக்கலை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி தலவாக்கலை, கூம்மூட் என்ற இடத்திலுள்ள 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வருமே படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating