தாய்லாந்து பள்ளி விடுதியில் தீ விபத்து – 17 மாணவிகள் உடல் கருகி பலி..!!

Read Time:1 Minute, 44 Second

timthumbதாய்லாந்து நாட்டில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 17 மாணவியர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள விங்போட்டாவ் மாவட்டத்தில் பழங்குடியின பகுதி மக்கள் வசிக்கும் பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இரண்டு மாடிகளை கொண்ட இந்தப் பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகள் தங்குவதற்கான விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 13 வயது பள்ளிச்சிறுமிகள் மட்டுமே படிக்கும் இந்த பள்ளியில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பிழம்பு கொழுந்து விட்டு எரியத்தொடங்கியதில், பள்ளியில் தங்கியிருந்த 17 பள்ளிச்சிறுமிகள் தீயில் சிக்கிக் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் இரு மாணவிகளை காணவில்லை என்பதால், அவர்களின் நிலைமை குறித்து அஞ்சப்படுகிறது. 5 மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவர் வாளுடன் கைது..!!
Next post ஏன் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்…!!