சிரியாவின் பல பகுதிகளில் தீவிரவாதிகள் அட்டூழியம்: நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி…!!
சிரியா நாட்டின் கடற்கரை நகரமான டார்டஸ் மற்றும் ஜப்லே ஆகிய பகுதிகளில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
சிரியாவில் போராளிகள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள சில முக்கிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கைகளை அரசுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள டார்டஸ் நகரில் இன்று மூன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல், நாட்டின் வடபகுதியில் உள்ள ஜப்லே நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 38 பேர் பலியாகினர். மேலும் நாட்டின் பிறபகுதிகளில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக சிரியாவில் முகாமிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating