பல்லாவரத்தில் டிரைவருக்கு கத்திகுத்து: 4 பேர் கைது…!!
Read Time:59 Second
பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்தவர் ராஜன் கார் டிரைவர். இவர் நேற்று குடி போதையில் பிரபு என்ற வாலிபரிடம் தகராறு செய்து அடித்து உதைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு, தனது தந்தை ஜெயச்சந்திரன், அண்ணன் சுரேஷ், நண்பன் தினேஷ் ஆகியோரை அழைத்துச் சென்று ராஜனுடன் தகராறு செய்து கத்தியால் குத்தினார். இந்த தகராறில் ராஜன் காலில் கத்திகுத்து விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பல்லவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, ஜெயச் சந்திரன்,சுரேஷ், தினேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Average Rating