தூக்கத்தில் நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற நபர்: காப்பாற்றிய பொலிசார்..!!

Read Time:1 Minute, 54 Second

timthumb (1)பிரித்தானிய நாட்டில் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதிகாலையில் நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மான்செஸ்ட்டர் நகரில் உள்ள Chorlton என்ற பகுதியில் உயர்தர ஹொட்டல் ஒன்றில் பெயர் வெளியிடப்படாத நபர் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 4.30 மணியளவில் அப்பகுதியில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, ஹொட்டலில் இருந்து வெளியேறிய அந்த நபர் சாலையில் இறங்கி நடக்க தொடங்கியுள்ளார்

சந்தேகம் அடைந்த பொலிசார் பின் தொடர்ந்து சென்றபோது, அவர் உடலில் எந்த ஆடைகளும் இல்லாமல் முழு நிர்வாணமாக நடந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், அந்த நபர் தூங்கியவாறே நடந்து சென்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட பொலிசார் பத்திரமாக ஹொட்டலுக்கு அழைத்து வந்து சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், ‘நபருக்கு ‘சோம்னாம்புல்சம்’ எனப்படும் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதால் இவ்வாறு நடந்துக்கொண்டுள்ளார்.

எனினும், நபரின் அடிப்படை உரிமைகளை காக்கும் வகையில் அவரை பற்றிய எந்த தகவலும் வெளியிட முடியாது’ எனக் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிப்பர் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!
Next post வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள்..!!