வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சாரம்..!!

Read Time:1 Minute, 41 Second

downloadவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்கும் செயற்பாடுகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது குறித்த பகுதிகளில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தண்ணீர் முற்றாக வடிந்து பாதுகாப்பான நிலைக்குத் திரும்பியுள்ள பிரதேங்களுக்கு படிப்படியாக மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் வெள்ளம் காரணமாக சேதமடைந்த மின்இணைப்புத் தொகுதிகள் மற்றும் மீட்டர்கள் என்பவற்றை இலவசமாக பொருத்துவதற்கும் மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

இச் செயற்திட்டத்திற்கான மின்சார சபை சுமார் ஏழு மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…!!
Next post அனர்த்தம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம்…!!