யானை தாக்கி உக்ரைன் நாட்டவர் பலி – பெண் படுகாயம்..!!
Read Time:52 Second
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஹபரணை – சீகிரிய வீதியில் இன்று (24) மாலை வேளையில் நடந்துள்ளது.
உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.
இதில் குறித்த ஆண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் பெண் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating