குழந்தை பாக்கியம் தருகிறேன்- பெண்களை ஏமாற்றி உறவு கொண்ட சாமியார் கைது…!!
குழந்தை பாக்கியம் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தின் ஹராய் கிராமத்தில் ராம் சங்கர் திவாரி என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தனது பெயரை பரமானந்த பாபா என்று மாற்றிக் கொண்டதுடன் குழந்தையில்லாத பெண்களை குறிவைத்து இவரது ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார்.
குழந்தையில்லை என மனமுடைந்து வரும் பெண்களை வசீகரிக்கும் வகையில் பேசி, தன்னுடன் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பிறக்கும் என நம்ப வைப்பாராம்.
வீட்டின் கூரையில் ரகசிய கமெராவை பொருத்தி பெண்களுடன் உறவு கொள்ளும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதை பார்த்து ரசிப்பது தான் இந்த பரமானந்த பாபாவின் வழக்கம்.
அதுமட்டுமின்றி இதுபற்றி யாருக்கும் சொல்லக்கூடாது என சத்தியம் வாங்கிக் கொள்வாராம்.
ஆனாலும் சில பெண்கள் வெளியே கூறினாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
தொடர்ந்து இதுதொடர்பான ஆதாரத்துடன் பொலிசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்ததன் அடிப்படையில், அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating