பொலிஸ் நிலையத்தில் பெண்ணை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய அதிகாரிகள்…!!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat பொலிஸ் நிலையத்தில், 51 வயதுடைய ஒரு பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் அடித்து, உதைத்து, இழுத்துச் சென்று நிர்வாணமாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
Ballarat பொலிஸ் நிலையத்தில் விசாரணையின் போது அதிக வன்முறை பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றத்தின்அடிப்படையில் the Independent Broad-based Anti-corruption Commission விசாரணை நடத்தியது.
அப்போது, பொலிஸ் நிலையத்தில் பதிவான குறித்த சிசிடிவி வீடியோ ஆதாரமாக IBAC ஆணையத்தின் முன் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, IBAC ஆணையத்தில் ஆஜராகி பதிலளித்த Ballaratபொலிஸ் நிலையத்தின் மூத்த அதிகாரி Munro கூறுகையில்,
கடந்த 2015 ஆம் ஜனவரி மாதம் குறித்த பெண் குடித்து விட்டு பொலிஸிடம் தகராறில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்ட பின்னர் அவர் பொலிசாரிடம் மரியாதையுடன் நடந்து கொண்டதாக Munro கூறியுள்ளார்.
பின்னர் Munroவும், சக அதிகாரியும் மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து போது, குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் வன்முறையில் ஈடுபடுவதாக அவருக்கு அழைப்பு வந்ததாகவும், உடனடியாக தான் விரைந்த போது பொலிசார் அவரை அமைதிப்படுத்த பெண்ணின் கைகளை பின்னால் வைத்து விலங்கிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உடன் பணியாற்றும் அதிகாரிகள் குறித்த பெண்ணை துன்புறுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் IBAC ஆணையத்தின் விசாரணையில், சிசிடிவி வீடியோ ஆதாரத்தின் மூலம் அதிகாரிகள் அனைவரும் குறித்த பெண்ணிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டது நிரூபணம் ஆகியுள்ளது.
Average Rating