பழனி விடுதியில் கேரள கள்ளக்காதல் ஜோடி தற்கொலை..!!
பழனிக்கு வந்த கேரள கள்ளக்காதல் ஜோடி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரை சேர்ந்த தேவதாஸ் (வயது50) என்பவர் ஒரு பெண்ணுடன் பழனிக்கு கடந்த 21-ந் தேதி வந்தார். கணவன்-மனைவி என கூறி பழனி அடிவார பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
2 நாட்களாக தங்கிருந்த அவர்கள் நேற்று காலை கோவிலுக்கு சென்றனர். பிற்பகலில் விடுதிக்கு திரும்பிய அவர்கள் அதன்பின்னர் வெளியே வரவில்லை. வெகு நேரமாக அவர்களின் அறை கதவு பூட்டியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது அவர்கள் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அடிவாரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
கதவை உடைத்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கள்ளக்காதலர்கள் என தெரிய வந்தது. தேவதாசுடன் தற்கொலை செய்து கொண்ட அந்த பெண்ணின் பெயர் ரஞ்சனி (வயது28). அவரது கணவர் சாம்லாம். இவர்களுக்கு அவனி, (7) அம்பாரி (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சாம்லாம் மும்பையில் வியாபாரம் செய்து வருகிறார்.
குழந்தைகளுடன் ஊரில் வசித்து வந்த ரஞ்சனிக்கு தேவனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே கண்டித்தனர்.
எனினும் அவர்கள் தொடர்பை துண்டிக்கவில்லை. கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் பழனி வந்தனர். வாழ்வில் ஒன்று சேரமுடியாத நிலை ஏற்பட்டதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
Average Rating