உத்தரகாண்ட்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!
Read Time:1 Minute, 7 Second
உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்துக்குள் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தின் மாசி நகரில் இருந்து அருகிலுள்ள நைனிடால் மாவட்டத்தின் ராம்நகருக்கு உள்ளூர் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டுச் சென்றது.
சுரிகாட்டி என்ற பகுதி வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் உடல் நசுங்கி பலியான எட்டு பேரின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்த 15 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating