வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை: பணம் கொடுக்க மறுத்ததால் போதை அடிமைகள் வெறிச்செயல்…!!

Read Time:2 Minute, 5 Second

201605252056565345_Hindu-businessman-hacked-to-death-in-Bangladesh_SECVPFவங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேசத்தின் வடமேற்கில் உள்ள கைபாந்தா என்ற இடத்தில் ஷூ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் திபேஷ் சந்திரா பிரமானிக். 68 வயதான இவர் இன்று கடையில் இருந்தபோது, போதைக்கு அடிமையான நபர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளானர். ஆனால், பிரமானிக் மறுக்கவே, அவர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு பிரமானிக்கின் தொண்டைபகுதியில் வெட்டியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே பிரமானிக் இறந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விசாரணையை துவக்கிய போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கொலை நடப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பும் இதே போன்று போதைக்கு அடிமையான சில நபர்கள் பணம் கேட்டு பிரமானிக்கை மிரட்டியதாகவும், இவர் கொடுக்க மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவரது மகன் தெரிவித்தார்.

எனினும், இந்த கொலை நடைபெற்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தரகாண்ட்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!
Next post ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்…!!