ஆஸ்திரேலியா சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் பலி..!!

Read Time:2 Minute, 5 Second

1E044C97-6E6B-4CD1-B1C3-78A7807D7EE0_L_styvpfஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே நர்சாக பணியற்றி வந்தவர் அன்ஜூமோல் (வயது 23). இவரது சகோதரி ஆஷா மேத்யூ(18) இவரும் இதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரும் கடந்த திங்கள்கிழமையில் இருந்து திடீரென மாயமாகினார்.

இதையடுத்து, அவர்களின் குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் இருவரையும் காணவில்லை என புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், குயின்ஸ்லாந்து பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் அவர்கள் இருவரும் பலியானது தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள ஒரு சாலையை கடந்து காரில் செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் சிக்கிய அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

இச்சம்பவம் கேரளாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சகோதரிகள் இருவரது உடலையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக இந்திய தூதரகத்தின் உதவியை உறவினர்கள் நாடியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்…!!
Next post சென்னையில் 106.16 டிகிரி வெயில்…!!