நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!

Read Time:2 Minute, 46 Second

201605251424175352_police-investigation-for-murdered-youth-is-alive-in_SECVPFநெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் ரெயில்வே பாலத்தையொட்டி கடந்த 9-ந்தேதி காலையில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், மணிமூர்த்தீசுவரம் வாழவந்தான் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் சுடலைராஜ் என்ற சுரேஷ் (வயது 33) என்று போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை உறவினர்கள் இறுதி சடங்குக்கு பின்னர் தகனம் செய்தனர். கொலையாளிகள் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சம்பவம் நடந்து 16 நாட்கள் ஆகியும் கொலையாளிகள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கொலை செய்யப்பட்டவர் சுடலைராஜ் அல்ல என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது போலீஸ் வட்டாரத்திலும், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். கொலைசெய்யப்பட்டவர் சுடலைராஜ் இல்லாத பட்சத்தில்,கொலையானவர் யார்? அவரை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கி உள்ளார்கள். உடல் தகனம் செய்யப்பட்டு விட்டதால் துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 16 ஆயிரம் குடும்பங்கள் : தொடர்ந்து முகாம்களில் தஞ்சம்..!!
Next post நாகரீக பெண்ணின் அநாகரீகமான முகம்சுழிக்க வைக்கும் செயல்…!!