திருப்பத்தூர் அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி..!!

Read Time:2 Minute, 17 Second

downloadராணிப்பேட்டையை சேர்ந்தவர் இம்ரான்அகமத். கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டம் மத்தூரில் இருந்து கோழிகளை வாங்கி வந்து ராணிப்பேட்டையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கோழிகளை ஏற்றி வருவதற்காக மத்தூருக்கு லாரியை அனுப்பினார். அந்த லாரியை ராணிப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஓட்டிச்சென்றார்.

லாரியில் வாணியம்பாடியை சேர்ந்த சமீல்அகமது (வயது 23). முனீர் அகமது (25), ஹத்திக்அகமது (28) ஆகியோரும் இருந்தனர். அந்த லாரி திருப்பத்தூரை அடுத்த காக்கங்கரை அருகே இரவு 11.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி அருகே இருந்த ஏரிக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் பாலாஜி, சமீல்அகமது, முனீர் அகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஹத்திக்அகமது காயத்துடன் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்திலி போலீஸ் இன்ஸ்பெக் டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த முனீர் அகமதுவுக்கு கடந்த 2½ மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சமீல் அகமதுவுக்கு கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு மனைவியும் 2½ வயதில் மகனும் உள்ளனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால், பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
Next post பொலிஸ் அதிகாரியின் மகள் கணவனால் கொலை – தாய் படுகாயம்..!!