பொலிஸ் அதிகாரியின் மகள் கணவனால் கொலை – தாய் படுகாயம்..!!
Read Time:1 Minute, 2 Second
ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் மற்றும் மனைவி, மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர் என பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட யுவதியின் தாயும் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தில் 20 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த தாய் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்திக் குத்தினை மேற்கொண்ட மருமகன் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating