கனடாவில் மனைவியை கொன்ற இந்தியர் கைது…!!

Read Time:1 Minute, 29 Second

201605261229252516_Indian-origin-man-who-killed-his-wife-in-Canada_SECVPFகனடா நாட்டில் பல லட்சம் சீக்கிய மக்கள் வசிக்கிறார்கள். கனடா நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் ஆவர்.

அங்குள்ள ரீஜினா என்ற இடத்தில் ஜெகதீஷ்சிங் (வயது 39) என்பவர் தனது மனைவி சந்தீப் கவுர் (38) என்பவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கனடாவின் மற்றொரு இடத்தில் உள்ள ஜெகதீசின் சகோதரர் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் சந்தீப் கவுர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். முதலில் அவரை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாமல் இருந்தது. போலீஸ் விசாரணையில் கணவரே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜெகதீசை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக கொலை செய்தார்? எப்படி கொலை செய்தார் என்ற விவரங்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: 7 பேர் நீரில் மூழ்கி சாவு…!!
Next post சென்னை ஐஸ்அவுசில் 3 வீடுகளில் பணம்-செல்போன்கள் திருட்டு…!!