சென்னை ஐஸ்அவுசில் 3 வீடுகளில் பணம்-செல்போன்கள் திருட்டு…!!
சென்னை ஐஸ்அவுசில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது.
ஐஸ்அவுஸ் கெஜபதி லாலா தெருவில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கினார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடினர்.
பின்னர் அவர்கள் பக்கத்து வீடுகளிலும் கைவரிசை காட்டினர். அருகில் உள்ள பவித்ரா என்பவரின் வீட்டில் ஒரு செல்போனையும், கல்பனா என்பவரின் வீட்டில் 2 செல்போன்களையும் திருடினர். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுபற்றி ஐஸ்அவுஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு பொது மக்கள் தூங்கியதை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Average Rating