கிங் ஓயாவில் மிதந்த சடலம்..!!
Read Time:57 Second
கிங் ஓயாவிலிருந்து சடலமொன்று வென்னப்புவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பண்டிருப்பு பிரதேசத்தில் இருந்து கிங் ஓயாவிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவரே , சடலமொன்று ஓயாவில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 45 வயதுடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்ற போதிலும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து வென்னப்புப் பொலிஸார் மேலதிக விசாரணையினை நடாத்தி வருகின்றனர்.
Average Rating