கணவன்களின் கட்டளைகளைக்கு கீழ்படிய மறுத்தால் மனைவி அடி: பாகிஸ்தான் மத அமைப்பு பரிந்துரை..!!
பாகிஸ்தானில் சி.ஐ.ஐ. என்னும் இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில், அரசியல் சாசன அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பால், இஸ்லாமிய சட்டப்படி மசோதா தயாரித்து அந்நாட்டு அரசை சட்டமாக இயற்றுமாறு அறிவுறுத்த இயலும். அந்த வகையில், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பதற்காக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மசோதா ஒன்றை உருவாக்கியது. ஆனால், இதை நிராகரித்த சி.ஐ.ஐ அமைப்பு மாற்றாக ஒரு மசோதா தயாரித்து இதை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த மசோதாவில் கணவன்களின் கட்டளைகளைக்கு கீழ்படிய மறுத்தால் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
163 பக்கங்களை கொண்ட இந்த வரைவு மசோதாவில், தான் சொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் லேசாக அடிக்கலாம். தனது விருப்பத்தின்படி உடை அணியாமலும், தனது தாம்பத்திய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உடன்படாமலும் இருக்கிற மனைவியை கணவர் அடிக்கலாம். அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசினாலும், சத்தமாக பேசினாலும், கணவரின் அனுமதியின்றி மற்றவர்களுக்கு பண உதவி செய்தாலும் மனைவியை கணவர் அடிப்பதை அனுமதிக்கலாம். தொடக்க கல்விக்கு அடுத்த நிலைகளில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கிற இருபாலார் கல்வி முறையை தடை செய்ய வேண்டும் பெண்கள் ராணுவ பயிற்சி பெறவும், வெளிநாட்டு தூதுக்குழுக்களை வரவேற்கவும், ஆண்களுடன் பேசுவதையும் தடை செய்ய வேண்டும் போன்ற சர்ச்சைக்குரிய பரிந்துரைகள் உள்ளன.
அதேவேளையில், பெண்கள் அரசியலில் இணையலாம் எனவும் பெற்றோர்கள் சம்மதம் இன்றி நிக்கா ஒப்பந்தத்தை செய்து கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு எதிரான உரிமைகள் நசுக்கப்படுவதாக சிஐஐக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் இந்த வரைவு மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Average Rating