தீப்பற்றி எரியும் வீட்டின் 5-வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்து உயிர் தப்பிய தம்பதி..!!

Read Time:1 Minute, 56 Second

201605272019099084_family-jump-from-their-flaming-fifth-floor-apartment-and-are_SECVPFரஷியாவின் தலைநகர் மாஸ்கோவின் அருகில் உள்ள நகரம் ஸ்ட்ருனினோ. இந்த நகரில் ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குடும்பம் வசித்து வந்தது.

சம்பவத்தன்று அந்த குடியிருப்பின் 4-வது மாடியில் உள்ள வீட்டில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இந்த தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இதனால், ஐந்தாவது மாடியில் இருந்த குடும்பம் உடனடியாக பால்கனிக்கு சென்றது.

அதற்குள் வீட்டின் கீழ் 20-க்கும் மேற்பட்டோர் கூடிவிட்டர். பால்கனியில் அந்த குடும்பத் தலைவர், தன் மனைவி மற்றும் 11 மாத குழந்தையுடன் தவித்துக்கொண்டிருந்தார். அதன்பின் தன் மனைவியை கிழே குதிக்கும்படி கூறினார். அவரது மனைவி தன் குழந்தையை முதலில் கீழே தூக்கி வீசினார். அதன்பின் அந்த பெண் கீழே குதித்தார். அப்போது கீழே இருந்த நபர்கள் இருவரையும் பாதுகாப்பாக பிடித்து காப்பாற்றினர்.

அந்த சமயத்தில் பாலகனியில் இருந்து குடும்பத் தலைவர் வானத்தை நோக்கி கடவுளிடம் தன் மனைவி குழந்தையை காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தார். பின்னர், அவரும் கீழே குதித்தார். அவரையும் கீழே இருந்தவர்கள் லாவகமாக பிடித்து காப்பாற்றினார்கள். தீக்காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உகண்டா பயணச் செலவை, சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த..!!
Next post யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சடலம் மீட்பு..!!