திருடனை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடவிட்ட பெண்…!!
கொலம்பியா நாட்டின் தலைநகரான பொகோடாவில் பெண்மணி ஒருவர் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் திருட முயன்றுள்ளார்.
அப்போது திடீரென அந்த பெண் கத்தியை தட்டிவிட்டு அந்த இளைஞனின் தலை முடியை பிடித்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அந்த இளைஞன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினான். ஆனால், கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த பெண்மணி அந்த இளைஞனை தரையில் உட்கார வைத்தார். அத்துடன் அவனது ஒவ்வொரு ஆடையாக களையச் சொன்னார்.
ஆடை முதல் ஷூ சாக்ஸ் வரை கழற்ற வைத்துவிட்டு தெருவில் நிர்வாணமாக ஓடும்படி அந்த பெண் விரட்டினார். அந்த இளைஞனும் பயத்துடன் நிர்வாணமாக தெருவில் ஓடினான். அவனை ஒரு சிறிய நாய் துரத்திக்கொண்டே சென்றது. நடுத்தெருவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்திக்குரிய வீடியோவை கீழே காண்க.
Average Rating