மெரினா கடற்கரையில் வாலிபர் கொலையா?: போலீசார் விசாரணை…!!

Read Time:1 Minute, 16 Second

201605271459009804_youth-murder-in-merina-police-investigation_SECVPFசென்னை மெரினா கடற்கரை வீரமாமுனிவர் சிலை பின்புறம் மணல் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

அந்த கடைகளின் அருகே உயரமான கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் வாலிபர் ஒருவர் இன்று காலை தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவல் கிடைத்ததும் மெரினா போலீசார் அங்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது தூக்கில் பிணமாக தொங்கியவர் பெயர் ரஞ்சித் (வயது30) என்றும், பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அவரை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று தகவல் பரவியது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகளே அதிகம் தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார் என்பதை உறுதியாக கூற முடியும்” என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சடலம் மீட்பு..!!
Next post திருடனை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடவிட்ட பெண்…!!