முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்–மகன் மீது தாக்குதல்: பெண் உள்பட 2 பேர் கைது..!!
Read Time:1 Minute, 4 Second
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது61). இவரது சகோதரர் முத்துப்பாண்டி (60). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டது.
அப்போது ராமநாதன் அவரது மனைவி ஜோதியம்மாள், உறவினர்கள் முனியம்மாள், ஷாலினி ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முத்துப்பாண்டியின் மனைவி ராஜம்மாள், மகன் காளிதாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பேரையூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி ராமநாதன் மற்றும் முனியம்மாளை கைது செய்தார்.
Average Rating