வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்..!!

Read Time:1 Minute, 46 Second

downloadவடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றுக் காலை புத்தளம் அருகே மதுரங்குளியில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் புத்தளம் வழியாக கொழும்பு நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்தில் தும்மளசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான முகைதீன் எனும் வாலிபர் படுகாயமுற்றுள்ளார். இவர் பாதையைக் கடக்க முயன்ற போது வாகனம் இவர்மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் முதலில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்த கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வாலிபர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபர் ஆதரவற்ற நபர் என்றும் மதுரங்குளியில் இருக்கும் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியொன்றில் அவர் பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

விபத்திற்குக் காரணமான வாகனம் மற்றும் அதன் சாரதியை பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென் கொரியாவை சென்றடைந்தார் பிரதமர் ரணில்..!!
Next post இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க..!!