பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி அடித்துக் கொலை

Read Time:4 Minute, 24 Second

201605281145335168_illegal-relationship-problem-husband-and-wife-dead_SECVPFபண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43) முந்திரி வியாபாரி. இவரது மனைவி ரோகினி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சக்திவேலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் அவர் நெருங்கி பழகி வந்தார். இது ரோகினிக்கு தெரிய வந்தது. அவர் கணவனை கண்டித்தார். ஆனால் சக்திவேல் கேட்கவில்லை. தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துவந்தார்.

இதனால் ரோகினிக்கு சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நடுக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவிற்கு சக்திவேல் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார்.

கோவில் திருவிழாவையொட்டி நள்ளிரவில் நாடகம் நடைபெற்றது. அதைப்பார்த்துவிட்டு வருமாறு தன் பிள்ளை களை சக்திவேல் அனுப்பி வைத்தார். அவர்களும் சென்று விட்டனர். ரோகினி வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும் சக்திவேலுக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கணவனிடம் ரோகினி கூறினார்.

ஆனால் அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டிக்கமுடியாது என்று சக்திவேல் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது . உடனே சக்திவேல் ஆத்திரமடைந்து இரும்பு கம்பி எடுத்து ரோகினியை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த ரோகினி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் சக்திவேல் வீட்டில் இருந்து வெளியே ஓடிவிட்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்று விட்டோமே என்று மனம் வருந்தினார். இனி என்ன செய்வது என்று நினைத்தார். வீட்டின் அருகில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு சக்திவேல் தற்கொலை செய்து கொண்டார்.

கோவில் திருவிழாவில் நாடகம் பார்க்க சென்ற சக்திவேலின் பிள்ளைகள் அதிகாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள். வீட்டில் ரோகினி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தாயின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். தந்தை சக்திவேல் எங்கு சென்றார் என்று பல இடங்களில் தேடினார்கள். இன்று காலை வீட்டின் அருகே உள்ள முந்திரி மரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கண்ணீர் விட்டனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி.இளங்கோவன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சக்திவேல் மற்றும் ரோகினியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாய்–தந்தையை இழந்த பிள்ளைகள் கதறி துடித்தது. பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே போலீஸ் ஜீப் மோதி பெண் பலி: கைதான பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாமீனில் விடுதலை…!!
Next post வாழப்பாடி அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…!!